காதலிக்கச் சொல்லி ‘ராக்கிங்’... மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

போபால்: போபாலி, காதலிக்கச் சொல்லி ராகிங் செய்ததால் மனமுடைந்த பி.பார்ம் கல்லூரி மாண்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போபாலில் உள்ள தனியார் பி.பார்ம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் அனிதா சர்மா. தொடர்ந்து இவரை ராகிங் செய்து வந்ததால் மனமுடைந்த அம்மாணவி, வீட்டில் யாருமற்ற வேளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ இந்தக் கல்லூரியில் சேர்ந்த நாள் முதற்கொண்டு இன்று வரை என்னைத் தொடர்ந்து ராகிங் செய்து வருகிறார்கள். இரண்டாம் ஆண்டு வந்தால் விட்டு விடுவார்கள் என நினைத்தே முதலாமாண்டை ஓட்டினேன். ஆனால் இப்போதும் அதே ராகிங் தொடர்கிறது.

மனிதத்தன்மை அற்ற வகையில் எனது வகுப்பைச் சேர்ந்தவர்களே என்னை ராகிங் செய்கிறார்கள். காதலிக்கச் சொல்லி வர்புறுத்துகிறார்கள் அந்த வெட்கமில்லாத பெண்கள். அதனாலேயே மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ராகிங் விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்பே கல்லூரியில் புகார் செய்திருந்தாராம் அனிதா. ஆனால், அவர்கள் நடவடிக்கை ஏது எடுக்காததாலேயே அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

அம்மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளான நான்கு மாணாவிகளும், ஒரு பேராசிரியரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+