ஹைதராபாத்தில் மோடியின் முதல் கூட்டம்.. பாஜகவினர் திரண்டனர்
ஹைதராபாத்: குஜராத் முதல்வரும், பாஜக லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தி்ல் நடந்த பாஜகவின் லோக்சபா தேர்தலுக்கான முதல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மோடி வருகையைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மோடி பேச்சாகவே இருந்தது.
லால்பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மோடி, லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் திட்டங்கள், பிரசாரப் பொருள் குறித்து பேசுகிறார்.

குவிந்த தொண்டர்கள்
ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் காவிமயமாக காணப்படுகிறது.

ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு
மோடி பேசவுள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் நேரடி ஒளிபரப்பு
மோடியின் பேச்சை ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரிவினைக்குப் பின் முதல் கூட்டம்
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப் போவதாக அறிவிப்பு வெளியான பின்னர் ஹைதராபாத்தில் மோடி பங்கேற்கும் முதல் கூட்டம் இது.

புதிய சிந்தனை - புதிய நம்பிக்கை
புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை என்ற ஸ்லோகனை இந்த கூட்டத்தில் மோடி அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதையும் மோடி சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications