தமிழகத்தில் இனி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 25?
சென்னை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ. 20 அல்லது 25 கட்டணமாக நிர்ணிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் கட்டண விகிதம் அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் இந்த கட்டணத்தை தமிழகத்தில் உள்ள அத்தனை ஆட்டோ டிரைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும்.

முதல் ஒரு கிலோமீட்டருக்கு
முதல் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ. 20 வசூலிக்கப்படும்.

2 கிலோமீட்டருக்கு ரூ. 25
அதேபோல முதல் 2 கிலோமீட்டருக்கு டெல்லியில் உள்ளதைப் போல ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும்.

முதல்வர் பார்வைக்கு
புதிய ஆட்டோ கட்டண விகித விவரம் முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும் அமல்படுத்தப்படும்.

உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26ல் தாக்கல்
ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட்26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அதற்குள் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும். உச்சநீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில்
ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான முத்தரப்புக் குழுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது நினைவிருக்கலாம்.

4 மணி நேர கூட்டம்
நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 8 மணி வரை நடந்தது. இதில் திமுக தொழிற்சங்கம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

ரூ. 30 கேட்ட தொழிற்சங்கங்கள்
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 30 நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை.

அவ்வப்போது கட்டணம் மாறும்
பெட்ரோல் விலை உயர்வின்போது அதற்கேற்ப கட்டணத்தையும் மாற்ற வேண்டும் அல்லது வருடத்திற்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications