பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி- சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு!

ஆந்திரா பிரிக்கப்படுவதால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றன. தெலுங்கானா பகுதியில் இருக்கும் தெலுங்குதேசம் கட்சியினர் தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் மவுனமாக இருக்கின்றனர்.
ஆனால் சீமாந்த்ராவில் அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டுக்குமே நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதனால் தெலுங்குதேசம் கட்சி தனித்து களம் கண்டால் படுதோல்வி என்பதே யதார்த்தம் என்று கருதுகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
இதனால் பேசாமல் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்னவென்று யோசித்து வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களான யனமல ராமகிருஷ்ணுடு, ரேவுரி பிரகாஷ் ரெட்டி, கர்மபதி ராம்மோகன் ராவ், சுஜானா செளத்ரி உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் சந்திரபாபுவோ, அப்படி பாரதிய ஜனஹ்டாவுடன் இணைந்தால் இஸ்லாமியர் வாங்கு வங்கி நிரந்தரமாக இல்லாமலேயே போய்விடும் என்றும் இப்போதைக்கு அதுபற்றி யோசிக்க வேண்டாம்.. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications