போர்க் கப்பல் விக்ராந்த் அறிமுகம்! ஏ.கே. அந்தோணி மனைவி தொடங்கி வைத்தார்!!

Subscribe to Oneindia Tamil

India to launch aircraft carrier INS Vikrant today
கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்த் இன்று கொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடற்படை திட்ட இயக்குனரகம் வடிவமைத்த விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்தின் கட்டுமானப் பணி 2006 நவம்பரில், கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது.

260 மீட்டர் நீளம் மற்றும் 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலின் எடை 37, 500 டன். உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பலின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் மனைவி எலிசபெத் இன்று கொச்சி துறைமுகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

வரும் 2016ல் கப்பலின் விரிவான சோதனை ஓட்டம் நடைபெறும்; 2018ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்படும். மிக் - 29, காமோவ் - 31 மற்றும் இலகு ரக விமானங்கள், இந்த கப்பலில் இருந்து பறக்கவும், தரையிறங்கவும் முடியும்.

ஐ.என்.எஸ். விக்ராந்த் மூலம், இதே போன்ற போர்க்கப்பல்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வரிசையில், இந்தியாவும் இடம்பெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+