காஷ்மீர், தெலுங்கானா, கேரள ஊழலால் இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் வகுப்பு மோதல், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களால் இன்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இன்று காலை நாடாளுமன்ற லோக்சபா கூடிய போது ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் வகுப்பு மோதல் பற்றி விவாதிக்க பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களோ தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதேபோல் இடதுசாரி எம்.பி.க்கள் கேரளாவின் சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் உம்மன் சாண்டியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்யசபாவிலும் இதே நிலைமை நீடித்ததால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications