அரசியல் கட்சிகளுக்கு விலக்கு.. ஆர்.டி.ஐ. சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், நிதி சேகரிப்பு, வேட்பாளர் தேர்வு விவரங்களையும் கோர முடியும் என்று தகவல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான மசோதா இன்று பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications