ஓட்டு வாங்க எப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கிறாங்கப்பா!: டாக்ஸி ஓட்டிய நார்வே பிரதமர்!!
நார்வே: வாக்காளர்களைக் கவர மக்களின் மனநிலையை அறியும் சாக்கில் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றியுள்ளார் நார்வே பிரதமர்.
நார்வேயில் வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சார உக்தியாகவும் பொதுமக்களின் மனநிலையை அறிய அந்நாட்டு பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தலைநகர் ஓஸ்லோவில் டாக்சி ஓட்டுநர் உடையணிந்து பிற்பகல் முழுவதும் அவர் ஓட்டுநராக பணியாற்றினார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் கார் ஒட்டி செல்வது புதிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்த ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் (Jens Stoltenberg), டாக்சி பயணத்தின் போதுதான் மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முடியும் என கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் கின் செல்வாக்கு சரியக்கூடும் என கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் அவர், மக்களின் மனநிலையை கண்டறிய ஓட்டுநராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அரசியல்வாதிகள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது. இதைப்பார்த்து நம் ஊர் அரசியல்வாரிகள் ஆட்டோ ஓட்டினாலும் ஆச்சரியமில்லை.












Click it and Unblock the Notifications