உணவு பாதுகாப்பு மசோதா மீது நாளை விவாதம்- எம்.பிகளுக்கு காங். கொறாடா உத்தரவு!
டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு மசோதா மீது நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து எம்.பிக்களும் நாளை நாடாளுமன்றத்தில் ஆஜராக காங்கிரஸ் கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உணவு பாதுகாப்பு திட்டம் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இதனாலேயே அவசர சட்டம் மூலம் இதை நடைமுறைப்படுத்தவும் முனைந்தது மத்திய அரசு.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதனால் அவசர சட்டத்தை ரத்து செய்துவிட்டு முந்தைய மசோதாவில் திருத்தம் கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இம்மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதத்தின் போது அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கொறாடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications