பெரியாறு அணை வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிக் கட்டிய கேரளா!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் வழக்கு. இந்த வழக்கில் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு நடைபெற்றது வருகிறது.
தற்போது கேரள அரசின் வாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, 2006ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயலற்றதாக ஆக்குவதற்குத்தான் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதா? உச்சநீதிமன்ற தீர்ப்பை முடக்கும் நோக்கத்தில்தானே சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று கேரள அரசு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை பார்த்து நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும் 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா ஏன் அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கேட்டனர். இதனால் கேரள அரசின் சட்ட திருத்தம் தவறுதான் என்று அம்மாநில வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications