கூகுளின் இந்திய சுதந்திர தின போட்டி: 4 பேருக்கு தலா ரூ.3 கோடி
வாஷிங்டன்: இந்திய சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் தாக்க சவால்(கூகுள் இம்பாக்ட் சாலஞ்ச் இன் இந்தியா) என்ற போட்டியை நடத்துகிறது.
இந்திய சுதந்திர
தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்துகிறது. இந்தியாவில் கூகுள் தாக்க சவால்(கூகுள் இம்பாக்ட் சாலஞ்ச் இன் இந்தியா) என்று அந்த போட்டிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இந்தியாவில் முறையே பதிவு செய்யப்பட்டுள்ள என்.ஜி.ஓ. அமைப்புகள் கூகுள் நிறுவனத்திற்கு தங்கள் திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படும் 4 என்.ஜி.ஓ.க்களுக்கு தலா ரூ.3 கோடியும், தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப உதவியும் கூகுள் வழங்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் என்ஜிஓக்கள் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். கூகுளை பயன்படுத்தும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் சமர்பிக்கப்பட்ட திட்டங்களை பரிசீலித்து அதில் 10 சிறந்த திட்டங்களை அக்டோபர் 21ம் தேதி அறிவிப்பார்கள்.
அதன் பிறகு நடுவர் குழு அதில் இருந்து 3 திட்டங்களை தேர்வு செய்யும். மேலும் மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்து ரசிகர்கள் விருப்ப விருதும் வழங்கப்படுகிறது.
சுதந்திர தினத்தை வித்தியாசமாய் கொண்டாட ஒரு வாய்ப்பு!