For Daily Alerts
Just In
வடதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வடதமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா கடலோர மாவட்டங்களில் மேலடுக்கு காற்றின் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம்.
இந்த சுழறியால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் / தென் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரையில் மழை விட்டுவிட்டு பெய்யும். ஓரிரு இடங்களி்ல் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
The weather bulletin from the India Meteorological Department (IMD) said, the Chennai sky condition would be generally cloudy. Light to moderate rain would occur. North Tamilnadu will get rain next 24 hours in the statement.
Story first published: Thursday, August 15, 2013, 15:29 [IST]