சுதந்திரதின விழா: பாஜக-காங்கிரஸ் அடிதடி- கொடியேற்றிய 3 வயது சிறுவன்
Subscribe to Oneindia Tamil

முசோரியில் உள்ள காந்தி சவாக் என்ற இடத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது கொடியேற்றுவது யார் என்ற பிரச்சினை உண்டானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முசோரி முனிசிபல் கவுன்சில் பிரசிடெண்ட் மன்மோகன் சிங்கிற்கும், முசோரி எம்.எம்.ஏ கணேஷ் ஜோஸிக்கும் இடையே மோதல் உருவானது. இருவரும் கொடிக் கம்பத்தில் இருந்த தேசியக் கொடியின் கயிறைப் பிடித்துக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
கொடியேற்ற விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் பிரச்சினையை தீர்க்க எவ்வளவோ போராடியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தவர்களாய், விழாவில் நடைபெற்ற மாறுவேடப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த 3 வயது சிறுவனை கொடியேற்ற வைத்தனர்.
இருவேறு கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் 3 வயது சிறுவன் கொடியேற்றிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications