காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கோரி நெல்லை கலெக்டரிடம் மனு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கடையநல்லூரில் சுதந்திர போராட்ட தியாகி காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கோரி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சீவனங்கால் பகுதியில் மணிமண்டபம் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் லத்திப் தலைமையில் கடையநல்லூர் நகராட்சி உறுப்பினர்கள் மொஹிதீன் பாத்திமா, செய்யது மசூத், முபாரக், ஆறுமுக சாமி, முத்து கிருஷ்ணன், ராசையா, கனி, வீரபாகு ஆகியோர் மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உடனே பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications