3 ஈழத்தமிழர்களை நாடுகடத்தக்கூடாது: பிரதமருக்கு வைகோ கோரிக்கை
சென்னை: ஈழத்தமிழர்கள் மூன்று பேர் நாடு கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கு, அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
"தமிழகத்தில் தஞ்சம் அடைந்து, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்ற, ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் (எ) சுந்தர்ராஜன் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளாக, இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது இல்லை. ஈழத்தமிழர்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக, நாடு கடத்தக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த மூவரையும் இலங்கைக்கு அனுப்பினால், அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையின் இரக்கமற்ற போலீஸ் மற்றும் ராணுவத்தின் கைகளில் சிக்கி அவர்களின் வாழ்க்கை ஆபத்தாக முடியும். அவ்வாறு அனுப்பினால் அது மனித உரிமைகள் மீதான தாக்குதலாக இருக்கும்.
காயம்பட்ட தமிழக மக்களின் இதயத்தில் அமிலத்தை ஊற்றுவதாகவும் இருக்கும். எனவே, தமிழர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை தடுத்து நிறுத்த உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications