Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ஈழத்தமிழர்களை நாடுகடத்தக்கூடாது: பிரதமருக்கு வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத்தமிழர்கள் மூன்று பேர் நாடு கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கு, அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

"தமிழகத்தில் தஞ்சம் அடைந்து, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்ற, ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் (எ) சுந்தர்ராஜன் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த இருபது ஆண்டுகளாக, இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது இல்லை. ஈழத்தமிழர்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக, நாடு கடத்தக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த மூவரையும் இலங்கைக்கு அனுப்பினால், அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையின் இரக்கமற்ற போலீஸ் மற்றும் ராணுவத்தின் கைகளில் சிக்கி அவர்களின் வாழ்க்கை ஆபத்தாக முடியும். அவ்வாறு அனுப்பினால் அது மனித உரிமைகள் மீதான தாக்குதலாக இருக்கும்.

காயம்பட்ட தமிழக மக்களின் இதயத்தில் அமிலத்தை ஊற்றுவதாகவும் இருக்கும். எனவே, தமிழர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை தடுத்து நிறுத்த உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+