காணாமல் போனது 257 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள்!

1993ஆம் ஆண்டு முதல் நிலக்கரிச் சுரங்கங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பான 257 கோப்புகள் காணாமல் போனதாக நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இக் கோப்புகளை வழங்குமாறு நிலக்கரி அமைச்சகத்துக்கு கடந்த மே மாதம் கடிதம் எழுதியதாகவும் ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்த 257 கோப்புகளில் 150 கோப்புகள், 1993க்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட 45 சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பானவை.
சில கோப்புகள் 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சுரங்க ஒதுக்கீடு குறித்த சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்புடையதாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே கோப்புகள் மாயமானதா? அல்லது அழிக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications