புகார் மழை எதிரொலி... திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் நாகநாதன்.
இவர் மீது சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கலையரசனுக்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில், நீதிபதி நாகநாதன் நேற்று மாலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை பார்கவுன்சில் சங்கத்தினரும், வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் இன்று காலை கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி சத்தியநாயராணனிடம் இது தொடர்பாக முறையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications