லோக்சபா தேர்தலில் கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டி: ஈஸ்வரன்
சென்னை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் பேசும் போது கூறியுதாவது:
தேர்தலில் குற்றவாளிகளும் தண்டனை பெற்றவர்களும் போட்டியிடக்கூடாது என்பதில் உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உறுதியாக உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் குற்றவாளிகளையே தேர்தலில் நிறுத்துவோம் என்பது போல் ஒன்று சேர்ந்து பிடிவாதமாக பேசி வருகின்றன.
எந்த இந்திய குடிமகனும் குற்றவாளிகள் கையில் நாட்டை ஒப்படைக்க விரும்ப மாட்டான். எனவே இது தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பு தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். மக்கள் கருத்துப்படி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
மழை காலத்தில் பெருமளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கின்றது. இதை தடுக்க கிடப்பில் போடப்பட்டுள்ள நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அரை டி.எம்.சி. தண்ணீருக்கு கர்நாடகத்தோடும் கேரளத்தோடும் போராடுகிறோம். ஆனால் நமது மாநிலத்திலேயே 10 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் கடலில் வீணாக கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் போட்டியிடும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி ஜனவரி மாதம் நடைபெறும் எங்கள் கட்சி பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications