தலைக்கு மேல் கடன் சுமை... கணவன், மனைவி தற்கொலை
தூத்துக்குடி: உடன்குடி அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி சியோன் நகரை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 55). அப்பகுதியில் தங்கநகை பட்டறை நடத்தி வந்த இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராமலெட்சுமி, அம்சலெட்சுமி, பூர்ணிமா என 3பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராமலெட்சுமியும், அம்சலெட்சுமியும் சென்னையிலுள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகின்றனர். பூர்ணிமா அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.
மதுப்பழக்கம் கொண்ட தங்கவேல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை தனது அப்பா-அம்மா வெகுநேரமாகியும் எழுந்திருக்காதது கண்டு பூர்ணிமா அருகில் சென்று பார்த்தார். அப்போது அவர்கள் இருவரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பான தகவல் கிடைத்த திருச்செந்தூர் போலீசார் விரைந்துசென்று தற்கொலை செய்துகொண்ட கணவன்-மனைவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் தங்கவேலுவின் பையில் இருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.
அந்த கடிதத்தில் நண்பர் ஒருவருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்காததாலும், இன்று நடக்க இருந்த திருமணத்திற்கு நகை செய்து கொடுக்க இயலாத காரணத்தினாலும் தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A couple commited sucide near Udankudi leaving behind 3 girl children.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications