மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம்- 2வது குற்றவாளி கைது
மும்பை: நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்கார சம்பவத்தில் 2வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் லோயர் பேலில் 22 வயது பெண் போட்டோகிராபர் செய்தி சேகரிக்க தமது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல், போட்டோகிராபரின் ஆண்நண்பரைத் தாக்கிவிட்டு அவரை பலாத்காரம் செய்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேரின் உத்தேச படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. பின்னர் குற்றவாளி ஒருவன் கைது செய்யப்பட்டதாகவும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய மும்பையில் வீடியோ பார்லர் ஒன்றில் பதுங்கியிருந்த 2வது குற்றவாளியையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications