ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்றும் தாக்குதல்! இந்தியா பதிலடி!!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இன்றும் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டது.
இந்திய- பாகிஸ்தான் துருப்புகளுக்கு இடையேயான சண்டை காலை 7.40 வரை நீடித்தது. இருப்பினும் இந்தியத் தரப்பில் எந்த சேதமும் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கேணல் ஆர்.கே. பல்டா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications