For Daily Alerts
Just In
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்றும் தாக்குதல்! இந்தியா பதிலடி!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இன்றும் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டது.
இந்திய- பாகிஸ்தான் துருப்புகளுக்கு இடையேயான சண்டை காலை 7.40 வரை நீடித்தது. இருப்பினும் இந்தியத் தரப்பில் எந்த சேதமும் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கேணல் ஆர்.கே. பல்டா தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Pakistan violated ceasefire again as the Pakistani troops fired using small arms and automatics in the Pooch sector of Jammu and Kashmir on Saturday. The Indian troops retaliated to the unprovoked firing that started around 7 am.
Story first published: Saturday, August 24, 2013, 16:55 [IST]