தமிழக திட்டக் குழுவில் இருந்து ஏ.சி. முத்தையா நீக்கம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
'ஸ்பிக்' நிறுவன தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா, பெல்ஜியம் நாட்டுக்கான சென்னையில் கெளரவ தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். அண்மையில் பெல்ஜியம் அரசு அவரை இந்த தூதர் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவின்படி பெல்ஜியம் நாட்டுக்கான கெளரவ தூதர் பொறுப்பில் இருந்து ஏ.சி. முத்தையா நீக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்து அறிவிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக திட்டக் குழுவில் இருந்தும் ஏ.சி. முத்தையாவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஏ.சி. முத்தையா, தமிழக திட்டக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications