Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய – மாநில அரசுகள் சரியில்லை… லோக்சபா தேர்தலுக்கு முன் மக்களை சந்திப்பேன்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய-மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது 61-வது பிறந்த நாளையொட்டி வஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகம் வந்தார். அங்கு கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கினார்.

100 பேருக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள்கள், 100 பேருக்கு சைக்கிள்கள், எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50ஆயிரம நன்கொடை ஆகியவற்றை விஜயகாந்த் வழங்கினார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள், நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது:

குறைகளை கேட்பதில்லை

குறைகளை கேட்பதில்லை

நான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் நான் என்ன பேசினாலும் குறை சொல்கிறார்கள். எனது குறையையும் கேட்பதில்லை. மக்கள் குறையையும் கேட்பதில்லை.

வறுமை ஒழிப்பு தினம்

வறுமை ஒழிப்பு தினம்

எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது போல ஒவ்வொருவரும் கொண்டாடினால் வறுமை ஒழியாதா என்று மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

நிலக்கரி ஊழல்

நிலக்கரி ஊழல்

காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரி நாராயணசாமி நிலக்கரி முறைகேடு தொடர்பாக சில பைல்களை மட்டும் காணவில்லை என்கிறார். ஆனால் சி.பி.ஐ. வேறொன்று சொ��்கிறது.

தொகுதி வாரியாக...

தொகுதி வாரியாக...

சேலத்தில் மாநாடு நடத்தியது போல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் மாநாடு நடத்தி தொண்டர்கள் குறை கேட்க முடிவு செய்துள்ளேன். விரைவில் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து குறைகேட்பேன்.

எல்லோரும் ஏமாற்���ுகின்றனர்

எல்லோரும் ஏமாற்���ுகின்றனர்

மத்திய-மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. இதற்கு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிக் கொண்டு எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

பிறந்தநாள் விழாவில்

பிறந்தநாள் விழாவில்

விழாவில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச் ச���்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், நல்லதம்பி, சேகர், வெங்கடேசன், அனகை முருகேசன், சிவகொழுந்து, மாவட்ட செயலாளர்கள் க.செந்தாமரைக் கண்ணன், வி.என்.ராஜன், ஏ.எம்.காமராஜ், யுவராஜ், வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.யு. சந்திரன், கலை இலக்கிய அணி செயலாளர் பி.ஜி.ராஜ்மோகன், கே.எஸ்.மலர்மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+