ஒடிஷாவின் 11 மாவட்டங்களை பிரித்து கோசாலா மாநிலம் அமைக்க கோரி முழு அடைப்பு!

Subscribe to Oneindia Tamil

Shutdown seeking Kosala state hits life in Odisha
கோராபுட், ஒடிஷாவின் கோராபுட், கலஹாண்டி உள்ளிட்ட 11 மாவட்டங்களைப் பிரித்து கோசாலா தனி மாநிலம் அமைக்கக் கோரி நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஒடிஷாவின் மேற்கு மாவட்டங்களான பர்கார், கோராபுட், பொலாங்கீர், பெளத், தியோகார், ஜர்சிகுடா, கலஹாண்டி, கோராபுட், நுபடா, சம்பல்பூர், சுபர்நபூர், சுந்தர்கார் ஆகியவற்றை உள்ளடக்கி கோசாலா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது கோசாலா கிராந்தி தள் அமைப்பின் கோரிக்கை.

இந்த 11 மாவட்டங்களில் கோராபுட், பொலாங்கீர், கலஹாண்டி,சம்பல்பூர் உள்ளிட்டவைகள் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிக்க பிரதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கோசாலி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர்.

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து கோசாலா தனி மாநிலம் அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் இங்கும் நடைபெற்று வருகிறது. நேற்று தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+