Yes... 'அம்மா' பிரதமராக வாய்ப்பிருக்கிறது - பரிதி ஆரூடம்!
நாகப்பட்டனம்: முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அதிமுக இணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.
நாகப்பட்டனம் வந்த அவர் அங்குள்ள அவுரித் திடலில் நடந்த அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்ோது அவர் பேசுகையில்,
திமுகவில் இருந்த நான் அந்த கட்சிக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. என்னை திட்டமிட்டு தோற்கடித்து திமுக எனக்கு துரோகம் செய்துள்ளது. அடிமை இந்தியாவில் இருந்த ஒருவர் சுதந்திர இந்தியாவை அடைந்தது போன்ற மகிழ்ச்சியை அடைகிறேன்.
இந்திராகாந்திக்கு பிறகு ஒரு பெண்மணி பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளதாகவும், அது ஜெயலலிதா தான் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் துணிவையும், செயலாற்றும் திறனையும் பார்த்து வடஇந்திய தலைவர்களே அவரின் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர் என்றார் அவர்.