மும்பை பத்திரிக்கையாளர் கற்பழிப்பு: குற்றவாளிக்கு 80 முறை போன் செய்த கான்ஸ்டபிள்..?
மும்பை: மும்பைப் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஐந்து குற்றவாளிகளில் ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், குற்றம் நடைபெற்ற பின்னர் கிட்டத்தட்ட 80 முறை தொலைபேசியில் பேசியது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். கடைசிக் குற்றவாளி கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில், மும்பை குற்றப்பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சலீம் முஜாவர் என்பவர், மும்பை பாலியல் குற்றவாளியான பன்காளியுடன் கடந்த மாதம் இறுதி முதல், சம்பவம் நடந்த அன்று இரவு வரை கிட்டத்தட்ட 80 முறை மொபைல் போனில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பன்காளி முன்பு போலீஸ் ஆள்காட்டியாக பணி புரிந்ததாகவும், அதற்காகவே கான்ஸ்டபிள் அடிக்கடி அவனை போனில் தொடர்பு கொண்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. சம்பவம் நடைபெற்ற உடன் பன்சாலியை சலீம் தொடர்பு கொண்டதாகவும், அவன் அவரை திசை திருப்புவதற்காக வேறு கூட்டாளிகளின் பெயரைக் கூறியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், ஏற்கனவே வேறு சில குற்றங்களில் தொடர்பு கொண்டுள்ள பன்காளியைச் சந்தேகத்தின் அடிப்படையிலேயே மொபைலில் தொடர்பு கொண்ட சலீம், என்எம் ஜோஷி மார்க்கில் உள்ள குற்றப்பிரிவு அலுவகத்திற்கு விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட பன்காளி, அவரது வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். முஜாவர் சந்தேகத்தின் பேரில் பன்காளியை அழைத்ததே அவர் தப்பியோட காரணம் என சில போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications