மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ இந்தியர்?
சியாட்டில்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பொறுப்புக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகிறது.
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் சிஇஓவாக இருந்த ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுகிறார் என்று வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. பால்மெர், மைக்ரோசாப்ட்டை பில்கேட்ஸுடன் இணைந்து உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவர் பால்மெர்.

தற்போது மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் சத்யா நடெல்லா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் தற்போதை கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவருமான குண்டோட்ரா.
இந்த இரு இந்தியர் பெயர்தான் மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications