பகுத்தறிவுவாதி தாபோல்கர் படுகொலை- கோவாவில் சிக்கினான் சனாதன் சன்ஸ்தாவின் ஷிண்டே!!
கோவா: மகாராஷ்டிராவில் பகுத்தறிவுவாதி தாபோல்கரை சுட்டுப் படுகொலை செய்தது தொடர்பாக ஹிந்து தீவிரவாத இயக்கமாமன சனாதன் சன்ஸ்தாவின் சந்தீப் ஷிண்டே என்பவன் கோவாவில் பிடிபட்டுள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது தாபோல்கரை மர்ம நபர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். தம் வாழ்நாளெல்லாம் பகுத்தறிவு சிந்தனையை பரப்பவும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் போராடிய தாபோல்கர் படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாபோல்கருக்கு சிறப்பு செய்யும் வகையில் அவரது போராட்ட இலக்குகளில் ஒன்றான பில்லி சூனியம், மூட நம்பிக்கைகளுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. தாபோல்கரை ஹிந்து தீவிரவாத இயக்கங்களே படுகொலை செய்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவாவில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்து தீவிரவாத இயக்கம் நடத்தி வரும் ஆசிரமத்தில் பதுங்கி இருந்த சந்தீப் ஷிண்டே என்பவை மகாராஷ்டிரா போலீசார் பிடித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு கோவா குண்டு வெடிப்பில் அவன் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். தற்போது சந்தீப் ஷிண்டேவை காவலில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சனாதன் சன்ஸ்தானாவைச் சேர்ந்த 70 பேரிடம் ஏற்கெனவே போலீசார் விசாரணை நடத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications