3 ஆண்டுகளாக, 14 சிறுமிகளை மிரட்டிக் கற்பழித்த விடுதிக்காப்பாளர் கைது

Subscribe to Oneindia Tamil

சியாங்: அருணாச்சலப் பிரதேசத்தில், தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவிகள் 14 பேரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாய் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் 3 முதல் 16வயது வரை உள்ள மாணவிகள் பலர் தங்கியுள்ளனர்.

அந்த விடுதிக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதிக் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இவரது மிரட்டலுக்கு பயந்த மாணவிகள் சம்பத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விடுதி காப்பாளரின் கொடுமைகளைத் தாங்க இயலாமல், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனச் சொல்லப் படுகிறது.

இதனால விடுதி சுவரை ஏறிக் குதித்து, வெளியே தப்பிச் சென்ற மாணவிகள் விடுதி காப்பாளர் மீது அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனைத் தொடர்ந்து விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் மேலும் 2 ஊழியர்கள் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு எதிராக சில சமூக நல நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பில் இறங்கியுள்ளன. இதனால், குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்கக்கூடாது என்ற எதிர்ப்பு வலுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+