For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கழுத்தறுபட்டு மர்மமான முறையில் ஐஐடி பேராசிரியர் மரணம்

Google Oneindia Tamil News

ரூர்கி: ரூர்கி ஐஐடி பேராசிரியர் ஒருவர் மர்மமான முறையில் வீட்டிற்குள் பிணமாகக் கிடந்தார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

60வயதான அருண்குமார் ரூர்கியில் உள்ள ஐஐடியில் கணினி பாடப் பிரிவில் மூத்த பேராசிரியர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது மனைவி காலமானதால், இவர் தற்போது தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவரது இரு மகள்களில் ஒருவர் வெளிநாட்டிலும், ஒருவர் குர்கானிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, அவரது இல்லத்தில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பிணமாகக் கிடந்துள்ளார் அருண். அவரது வீட்டின் வேலையாள் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மறைந்த பின்னர் தனிமையில் மன உளைச்சலில் அருண் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர் அவரது உறவினர்கள்.

English summary
A senior professor at IIT Roorkee, was found dead at his flat on the campus with his throat slit, a senior police official said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X