கழிவறைகளை சுத்தம் செய்யும் பெண்ணிடம் செக்ஸ் சேட்டை
மும்பை: மும்பையில் ரயில்வே நிலையப் பகுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பெண்ணிடம் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு 20 வயதாகிறது. கண்டிவ்லி ரயில்வே யார்டு பகுதியில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பிளாட்பாரத்தி்ல் தங்கியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு அவர் வேலை முடிந்து மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு ரயில் பெட்டியில் ஏறிப் படுக்கப் போனார். அப்போது ஒரு நபர் வந்து அப்பெண்ணை தட்டி எழுப்பினார். பின்னர் உனக்குப் பசிக்கிறதா, சாப்பிட வாங்கித் தரவா என்று கேட்டு அப்பெண்ணை தவறான இடங்களில் தொட்டுள்ளார்.
பயந்து போன அப்பெண், தனது செருப்பைக் கழற்றி அடித்து அவரை விரட்டினார். பின்னர் தப்பி ஓடினார். அவர் தப்பி ஓடுவதையும், பின்னாலேயே ஒரு நபர் விரட்டுவதையும் பார்த்த சமூக சேவகர் ஒருவர் அந்த நபரைத் துரத்திச் சென்றார். அதைப் பார்த்த அந்த நபர் ஓடி விட்டார்.
பின்னர் ரயில்வே போலீஸாரிடம் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற சமூக சேவகர் புகார் கொடுத்தபோது போலீஸார் வாங்க மறுத்து விட்டனராம்.
இந்த விவகாரம் மும்பையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications