For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை... பதற்றம்

Google Oneindia Tamil News

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் நம்பிராஜன், அவர் பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இன்று மதியம் அவரும் அவரது நண்பர்கள் நாராயணன் மற்றும் ஒருவர் பாளையங்கோட்டை ரயில்வே கேட் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

Law college student murdered

காரில் சென்றவர்கள் கடையின் அருகில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவர் நம்பிராஜனை சரமாரியாக வெட்டியது தடுக்க சென்ற நாராயணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

சக மாணவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வர கும்பல் தப்பியோடியது, பின்னர் ரத்தவெள்ளத்தில் மிதந்த மாணவர்களை தூக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு சிகிட்சை பலனின்றி நம்பிராஜன் இறந்தார்,இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் எதற்காக மாணவர் கொலை செய்யப்பட்டார்? முன் விரோதம் காரணமா? அல்லது குடும்ப பிரச்னையாஎன விசாரணை நடக்கிறது பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tension prevailed on the Nellai following the murder of a final-year student on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X