For Daily Alerts
Just In
கிருஷ்ணனை இழிவுபடுத்திய கி. வீரமணி மீது நடவடிக்கை எடுங்கள்: கமிஷனரிடம் யாதவ மகாசபை புகார்
சென்னை: இந்து கடவுளான கிருஷ்ணனை இழிவுபடுத்தும் வகையில் பேசும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் யாதவ மகாசபை புகார் கொடுத்துள்ளது.
யாதவ மகா சபை தலைவர் தேவநாதன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணன் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார். வீரமணியின் இந்த கருத்து இந்து சமுதாயத்தை புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
English summary
Yadava Mahasabha has given a complaint to the Chennai police commissioner against DK chief K. Veeramani.
Story first published: Monday, September 2, 2013, 16:27 [IST]