டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து மாணவன் பலி
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் கோவிந்தபூரி பகுதியில் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மாணவன் பெயர் சாகர் என்பது தெரியவந்துள்ளது. 9ம் வகுப்பு படித்து வந்தான். மதியம் 1.30 மணியளவில் பள்ளியில் இருந்து அரசு பேருந்தில் வீடு திரும்பிய மாணவன் இறங்கும் முன்பாக தவறி விழுந்துவிட்டான்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். மாணவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, பெற்றோர்களும், உறவினர்களும் கதறியழுதனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 10 டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமாளித்தனர்.












Click it and Unblock the Notifications