குறைந்து வரும் வெளிநாட்டு மோகம்... தாயகம் திரும்பும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பெங்களூர்: தொழில்நுட்பத் துறையைத் தொடர்ந்து தற்போது சுகாதாரத் துறையிலும் வெளிநாட்டிலிருந்து தாயகத்திற்குத் திரும்பி வருவோர் அதிகரித்து வருகின்றனராம்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பதை விட இந்தியாவுக்குத் திரும்பி, இங்கு பணியாற்றுவதே சிறந்தது என்ற எண்ணத்தில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பல டாக்டர்கள் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.

பலதுறை மருத்துவர்கள்....
பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் என பலதுறை மருத்துவர்களும் தாயகம் திரும்புவதில் ஆர்வம் காட்டுவதாக இந்ததத் தகவல்கள் தெரிவிக்கி்றன.

பெங்களூரில் தான் அதிகம்....
குறிப்பாக பெங்களூரில்தான் இந்த தாயகம் திரும்பும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொர்க்கமே என்றாலும்....
அமெரிக்க, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பணியாற்றும் பெங்களூர் டாக்டர்கள் பலர் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனராம்.

குவியும் விண்ணப்பங்கள்....
பெங்களூரில் உள்ள பல்வேறு பிரபல மருத்துவமனைகளுக்கு சராசரியாக 8 முதல் 10 விண்ணப்பங்கள் வரை மாதந்தோறும் இந்த நாடுகளில் பணியாற்றும் இந்திய டாக்டர்களிடமிருந்து வருகிறதாம்.

இளம் மருத்துவர்கள்...
இதுகுறித்து மணிபால் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுதர்சன் பலால் கூறுகையில், நான் வாரம் ஒருவரை இன்டர்வியூ செய்கிறேன். கடந்த 6 மாதத்தில் 12 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அனைவருமே 30 வயதுகளில் இருக்கும் இளம் டாக்டர்கள் ஆவர் என்றார்.

நாராயணா நகரிலும்....
இதேபோல நாராயண சுகாதார நகரில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையிலும் வெளிநாட்டில் பணியாற்றும் பல இந்திய டாக்டர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனராம். மாதந்தோறும் தங்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கவிலிருந்து ச ராசரியாக 10 விண்ணப்பங்கள் வருவதாக இந்த மருத்துவமனை கூறுகிறது.

இந்தியாவிலேயே அதிக வாய்ப்புகள்...
இதுகுறித்து டாக்டர் பாட்டீல் என்பவர் கூறுகையில், 20 வருடங்களுக்கு முன்பு நிறைய இந்திய டாக்டர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அப்போது இங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. நிறைய வாய்ப்புகள், நிறைய மருத்துவமனைகள், நிறைய வசதிகள் உள்ளன.

அதிக ஆர்வம்....
எனவேதான் நிறைய டாக்டர்கள் தற்போது தாயகத்திலேயே பணியாற்ற ஆர்வம் காட்டுகின்றனர் என்றார். பாட்டீல் 5 ஆண்டுகள் இங்கிலாந்தில் பணியாற்றியவர் ஆவார்.

40ல் 10 பேர்.....
ஸ்பார்ஷ் மருத்துவமனையில் பணியாற்றும் 40 ஆர்த்தோபீடிக்ஸ் மருத்துவர்களில் 10 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்.

கடந்த ஐந்தாண்டுகளாகத்தான்....
கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் இப்படி தாயகம் திரும்பும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.

புற்றுநோய் கிசிச்சை....
புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கு இந்தியாவில் தற்போது நில்ல கிராக்கி உள்ளது. காரணம், இந்தியாவில் புற்றுநோய்த் தாக்குதல் அதிகரித்து வருவதால். எனவே அத்துறை டாக்டர்கள் பலர் இந்தியாவுக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ஆய்வுப்பணிக்கான களம்....
மேற்கத்திய நாடுகள் பலவற்றில் டெங்கு, டிபி, மலேரியா போன்றவை இல்லை. ஆனால் இந்தியாவில் இவை அதிகமாகவே உள்ளன. எனவே இந்தியாவில் பணியாற்றுவதால் இந்த நோய் ஒழிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு இந்தியாவே பொருத்தமானது என்று இளம் டாக்டர்கள் பலர் கருதுவதால் தாயகம் திரும்பஆர்வம் காட்டுகின்றனராம்.

குறையும் வெளிநாட்டு மோகம்....
தொழில்நுட்பத் துறையினரைப் போலவே தற்போது மருத்துவர்கள் மத்தியிலும் வெளிநாட்டுப் பணி என்ற கனவு போய் விட்டது. இனிமேலும் வெளிநாட்டு மோகத்தில் டாக்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று இங்குள்ள மருத்துவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இதைத்தான் அவர்கள் திரும்பிவருவது காட்டுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications