சேலம் திமுக பிரமுகர் கொலை- 5 பேரிடம் விசாரணை
சேலம்: சேலம் மகுடஞ்சாவடி திமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகுடஞ்சாவடியை அடுத்த இளம்பிள்ளை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (52). ஜவுளி தொழில் அதிபர். மேலும் இளம்பிள்ளை பேரூர் 14-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு மாலினி (51) என்ற மனைவியும், முரளி கிருஷ்ணன் (25), ஜெயப்பிரகாஷ் (19) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் திங்களன்று மதியம் 1 மணியளவில் வீட்டின் மாடியில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் பணம், 50 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். பிணத்தை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் கோபால கிருஷ்ணனின் ஜவுளி கடையில் வேலைப்பார்க்கும் தியாகராஜன் என்பவரது மகன்கள் சபரிநாதன், லட்சுமணன், மற்றும் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, அருண், சங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications