சென்னையில் பகலில் வெயில்… இரவில் சூறை காற்றுடன் கனமழை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கையின் மேல் அடுக்கில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், கடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென மழை கொட்டியது. காலை முதலே அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் லேசான குளிர் காற்று பரவியது. பின்னர் 10 மணிக்கு மேல் திடீரென சூறை காற்றுடன் இடி-மின்னலோடு மழை பெய்தது.

மழையோடு காற்றும் அதிகம் வீசியதால், சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே சென்றனர்.
சூறை காற்றுக்கு ஒரு சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் கீழே விழுந்தன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
மயிலாப்பூர், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
காலையில் அடித்த வெயிலுக்கு இரவில் பெய்த மழையால் குளிர்ச்சி பரவியதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications