தண்டனை பெற்ற எம்.பி, எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்: அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தண்டனை தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தால், அதன் மீதான தீர்ப்பு வரும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த பிரிவை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறுபவர்கள் அன்றே பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசித்த மத்திய அரசு, "தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்கலாம்; ஆனால் அவர் அவையில் நடைபெறும் வாக்களிப்பில் பங்கேற்க முடியாது, அதே சமயம் தேர்தலில் போட்டியிடலாம்" என சட்ட திருத்த மசோதா ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றியது.
இந்நிலையில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்பு வெளியான உடனேயே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்த மசோதாவை குறிப்பிட்டு, "ஒரு வேட்பாளர் சிறையில் இருக்கும்போது தேர்தலில் போட்டியிடுவது அவருக்கு சரியானதாக இருக்கலாம். ஆனால் அவரால் ஓட்டுப்போட முடியாது? இது என்னவிதமான சட்டம்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இருப்பினும் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மறுசீராய்வு செய்யக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications