வாரிசுன்னா அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்- ஸ்டாலின்
புதுக்கோட்டை: வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். வாரிசு இல்லாதவர்கள்தான் இதுகுறித்துப் புலம்புவார்கள் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
வாரிசு அரசியல் குறித்து ரொம்ப காலமாகவே தமிழகத்தில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி குடும்பம்தான் வாரிசு விவகாரத்தில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்ட அரசியல் குடும்பமாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பலமுறை விளக்கம் அளித்து விட்டார். இந்த நிலையில் தற்போது பொருளாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் அதிரடியான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு வீட்டுத் திருமணத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எல்லாம், வாரிசு இல்லாத வர்களின் புலம்பலாகக் கருதலாம். வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications