Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

Subscribe to Oneindia Tamil

1984 anti-Sikh riots:: US court summons Sonia Gandhi
நியூயார்க்: கடந்த 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற முயன்றதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி காப்பாற்ற முயல்வதாக சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) மற்றும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த 27 பக்க மனுவில், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் கமல் நாத், சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்லர் மற்றும் சில பேரை காப்பாற்ற முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை 30,000 சீக்கியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

சோனியா மருத்துவ பரிசோதனைக்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+