தற்கொலை செய்யும் முன்பு உடலை தானம் செய்த சீன நபர்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை தொடர்பான பிரச்சனையால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போலீசாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் எனது உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த எஸ்.எம்.எஸ்.ஐ நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும் என்று அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வாங்கின் வீட்டிற்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கி கொண்டிருந்தார்.
வாங் தனது உடலை தானம் செய்ய ஏற்கனவே விண்ணப்பிக்காததால் அதை ஏற்க ரெட் கிராஸ் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications