விலை சரிவு: ஆன்லைனில் கிலோ ரூ.9க்கு விற்பனையாகும் வெங்காயம்
டெல்லி: ஆன்லைனில் ரூ.9க்கு வெங்காயம் விற்பனை செய்வதாக டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் டெல்லி உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனையானது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் வெங்காயம் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தின.
இதையடுத்து மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது. இதனால் அதிக அளவில் வெங்காயம் இறக்குமதியாகிறது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை கட்டுக்குள் இருக்கிறது. கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.

வியாபாரிகள் கண்ணீர்
இறக்குமதி அதிகரித்து உள்நாட்டில் உற்பத்தியான வெங்காயமும் குவிந்து கிடப்பதால் விலை மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் உரிக்காமலேயே மொத்த வியாபாரிகளை கண்ணீர்வர வழைக்கச் செய்துள்ளது.

ஆன்லைனில் விற்பனை
வெங்காயம் அழுகும் பொருள் என்பதால் நீண்ட நாள் சேமித்து வைக்க முடியாது. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த மொத்த விற்பனையாளர் ஒருவர் ஆன்லைன் மூலம் கிலோ ரூ.9க்கு வெங்காயம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ‘குரூப் ஆன் இந்தியா' என்ற ‘ஆன் லைன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

கிலோ ரூ.9க்கு
குரூப் ஆன் இந்தியா நிறுவனம் இணையதள ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் அனைத்து உபயோக பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இனி அந்த நிறுவனம் வெங் காயத்தையும் விற்பனை செய்கிறது. இணையதளத்தில் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டால் ரூ.9க்கு வெங்காயம் கிடைக்கும்.

டோர் டெலிவரி
அடுத்த 7 நாட்களுக்கு மட்டும் நாடு முழுவதும் 78 நகரங்களில் கிடைக்கும் என்றும், தேவைப்படுவோருக்கு ‘டோர் டெலிவரி' செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப் போகாது
வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க விசேஷமாக பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும். இணையதளம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் வெங்காயம் ‘புக்' செய்பவர்களுக்கு டெலிவரி பாய்கள் மூலம் சப்ளை செய்யப்படும்.

3000 கிலோ வெங்காயம்
முதலில் 10 நாட்களுக்கு விற்பனை செய்யப்படும். அதன் பிறகு ஸ்டாக் தீரும் வரை விற்பனை நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 3000 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு குரூப் ஆன் இந்தியா நிறுவன அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications