புனே மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க வருகிறது இ-டேக் திட்டம்
புனே: அரசு மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் திருடுபோவதை தடுக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த புனே முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் திருடுபோவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க புனே முனிசிபல் கார்பரேஷன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக இந்த திட்டம் கமலா நேரு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிரசவத்திற்காக பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். தாயின் கைரேகை எலக்ட்ரானிக் மெஷினில் பதியப்படும். இதையடுத்து குழந்தை பிறந்த பிறகு அதன் கால் ரேகையும் எலக்ட்ரானிக் மெஷினில் பதிவு செய்யப்படும். மேலும் குழந்தையின் முழங்காலிலும், தாயின் கையிலும் எலக்ட்ரானிக் டேக் கட்டப்படும்.
இந்த டேக் மூலம் குழந்தையின் அசைவை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்க முடியும். குழந்தைகளை வைத்திருக்கும் அறையில் இருந்து யாராவது குழந்தையை தூக்கிச் சென்றால் சைரன் கத்தும். அதன் மூலம் ஊழியர்கள் வந்து குழந்தையை காப்பாற்ற முடியும். தாய் மற்றும் குழந்தையின் கையில் உள்ள டேக்கில் இருக்கும் கோடிங்கால் குழந்தை மாற வாய்ப்பில்லை.
ரூ.75 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்துவிட்டு பிற மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த புனே முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications