நிலக்கரி ஊழல்: சிபிஐ சம்மன் அனுப்பினால் பிரதமர் விசாரணைக்கு தயார்- கமல்நாத்
Subscribe to Oneindia Tamil

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தேவையான கோப்புகளை மத்திய அரசு, சிபிஐக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சிபிஐ கோரிய கோப்புகளைக் காணவில்லை என்று மத்திய அரசு கைவிரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பெரும் நெருக்கடியையும் உருவாக்கியது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங் ஆஜராகக் கோரி சிபிஐ சம்மன் அனுப்பினால் அவரும் விசாரணைக்கு ஆஜராக தயார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications