தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...17 பேருக்கு பதவி உயர்வு
சென்னை; தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பதவிக்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்திற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும், பழைய பதவியும் வருமாறு.

1. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சைபர் அரங்கம் எஸ்.பி, ரம்யா பாரதி டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி, பொன்னி டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. டெல்லிக்கு அயல் பணியில் சிபிஐ எஸ்.பியாக பணியாற்றும் சோனல் சந்திரா டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியை தொடர்கிறார்.
4. தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை சிபிசிஐடி டிஐஜி ரூபேஷ்குமார் மீனா இடமாற்றம் செய்யப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜி ஆன்னி விஜயா இடமாற்றம் செய்யப்பட்டு வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. காவலர் பயிற்சி டிஐஜி கயல்விழி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. அயல் பணியில் பாங்காக்கில் இந்திய தூதரக டிஐஜியாக (கவுன்சலர்) பணியாற்றும் செந்தில்வேலன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில் தொடர்கிறார்.

10. அயல் பணியில் நாக்பூரில் ஐ.பி துணை இயக்குநராக பணியாற்றும் அவினாஷ் குமார் டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.
11. அயல் பணியில் டெல்லியில், சிபிஐயில் டிஐஜியாக பணிபுரியும் அஸ்ரா கார்க் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில் தொடர்கிறார்.
12. வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. சென்னை ஆயுதப்படை டிஐஜி எஜிலியரசனே ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.
14. சென்னை செயலாக்க பிரிவு டிஐஜி செந்தில்குமாரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக (உறுப்பினர் செயலர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
15. சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் துரைகுமார் டிஐஜி பொறுப்பிலிருந்து ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
16. சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. உளவுத்துறை டிஐஜி ஆசியம்மாள் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் ஐஜியாக தொடர்கிறார்.
18. தொழில்நுட்ப பிரிவு டிஐஜி மல்லிகா ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவலர் நலன் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19. சென்னை போக்குவரத்து காவல் வடக்கு இணை ஆணையர் லலிதா லட்சுமி டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
20. திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜி ஜெயகௌரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
22. மதுரை சரக டிஐஜி காமினி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
23. சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜி கபில் குமார் சரத்கர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
24. திருநெல்வேலி நகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
25. திருப்பூர் நகர காவல் ஆணையர் வனிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
26. சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மகேந்திர குமார் ரதோட் இடமாற்றம் செய்யப்பட்டு மாநில மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27. மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி, சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு ஏஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
28. பீகாரில் இருந்து தமிழக கேடராக அயல் பணியில் வந்துள்ள எஸ்பி அபினவ் குமார் சென்னை டிஜிபி அலுவலகம் விரிவாக்கப்பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
29. சென்னை விரிவாக்கப் பிரிவு ஏஐஜி வேதரத்தினம் இடமாற்றம் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சைபர் அரங்கம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
30. சென்னை டிஐஜி (பொதுப்பிரிவு) ராதிகா ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் ஐஜியாக தொடர்கிறார்.
இவ்வாறு உள்துறை செயலர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications