அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்.. அதிகாலையில் திடீரென குலுங்கிய கட்டிடங்கள்
போர்ட் பிளேர்: அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின.

அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 218 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டரில், "ரிக்டர் அளவுகோலில் 4.3க்கு இன்று அதிகாலை 5.28 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 218 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications