தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு அரக்கோணத்தில் நடந்த கொள்ளை.. 4 பேர் கைது! பரபர தகவல்கள்
அரக்கோணம்: தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. புஷ்கரன் தனது தாய், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அவரது வீட்டை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேகமாக தட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த புஷ்கரன் கதவைத் திறக்காமல் யார் என கேட்டுள்ளார். அதற்கு அந்த கொள்ளையர்கள் பதில் அளிக்கவில்லை. எனினும் கதவை திறக்க மறுத்துள்ளனர்.

கொள்ளை
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் கதவை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். இதில் வீட்டிலிருந்தவர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை, 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

திரைப்படம்
இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீரன் திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடிப்பார்கள்.

உரிமையாளர்கள்
கொள்ளையடித்துவிட்டு உரிமையாளர்களையும் கொன்றுவிடுவார்கள். இந்த நிலையில் அரக்கோணத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள வியாசபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.

துப்பாக்கி
இதே இளைஞர்கள் கடந்த அக்டோபர் 15 ம் தேதி அரக்கோணம் அடுத்த பாலவாய் கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அந்த துப்பாக்கியை பயன்படுத்தியே ஆடிட்டர் புஷ்கரன் வீட்டில் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications