தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு அரக்கோணத்தில் நடந்த கொள்ளை.. 4 பேர் கைது! பரபர தகவல்கள்
அரக்கோணம்: தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. புஷ்கரன் தனது தாய், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அவரது வீட்டை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேகமாக தட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த புஷ்கரன் கதவைத் திறக்காமல் யார் என கேட்டுள்ளார். அதற்கு அந்த கொள்ளையர்கள் பதில் அளிக்கவில்லை. எனினும் கதவை திறக்க மறுத்துள்ளனர்.

கொள்ளை
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் கதவை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். இதில் வீட்டிலிருந்தவர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை, 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

திரைப்படம்
இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீரன் திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடிப்பார்கள்.

உரிமையாளர்கள்
கொள்ளையடித்துவிட்டு உரிமையாளர்களையும் கொன்றுவிடுவார்கள். இந்த நிலையில் அரக்கோணத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள வியாசபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.

துப்பாக்கி
இதே இளைஞர்கள் கடந்த அக்டோபர் 15 ம் தேதி அரக்கோணம் அடுத்த பாலவாய் கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அந்த துப்பாக்கியை பயன்படுத்தியே ஆடிட்டர் புஷ்கரன் வீட்டில் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications