சுற்றுச்சூழல் கட்டுரைக்கு அங்கீகாரம்.. துபாய் சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்கும் அரியலூர் சவுமியா
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் சவுமியா எனும் மாணவி துபாயில் நடைபெறும் சர்வதேச அமைதி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அபுதாபி: அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி சவுமியா சுற்றுச்சூழல் குறித்த தனது கட்டுரைக்காக துபாயில் சர்வதேச அமைதி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அரியலூரை சேர்ந்தவர் சவுமியா. இழர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல், இயற்கை, சுகாதாரம் உள்ளிட்டவற்றின் மீது தீராத ஆர்வம் இருந்து வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தன் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதால் எப்போதும் அது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட வண்ணம் இருந்தார். மின் மற்றும் மின்னணு துறையில் (EEE) பொறியியல் படித்து வரும் சவுமியா காரியம் மற்றும் மெர்குரியால் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு கட்டுரையை தயார் செய்தார்.
இதையடுத்து 4 மாதங்களுக்கு முன்பு அந்த கட்டுரையை அமெரிக்க நிறுவனமான உலக அமைதி மாநாட்டிற்கு சமர்ப்பித்தார். இந்த கட்டுரையில் மாணவி குறிப்பிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு அவரை சர்வதேச அமைதி மாநாட்டிற்கு அழைத்துள்ளார்கள்.

இந்த மாநாடு துபாயில் வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட இதர ஆவணங்களை பெற்றுக் கொண்டார். தனது கட்டுரையையும் அமெரிக்க நிறுவனம் அளித்த அங்கீகாரத்தையும் தனது பல்கலைக்கழகத்தின் டீன், முதல்வர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்களிடம் காண்பித்துள்ளார்.

அவர்கள் சவுமியாவை வெகுவாக பாராட்டியுள்ளனர். அது போல் சவுமியா அந்த மாநாட்டில் கலந்து கொள்ள தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. அரியலூரில் இருந்து சென்னை வந்து 3 ஆண்டுகள் தங்கி படித்து தற்போது தனக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்ததோடு மாணவி துபாய் சென்று வர ஒப்புதலும் தந்துவிட்டதால் மாணவி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

அவரது பெற்றோரும் உறவினர்களும் தனது மாணவி கடல் கடந்து போவதை எண்ணி பூரித்து போயுள்ளார்கள். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் காரியம் இருக்கிறது , இது காற்று மாசை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications