Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவை விட மோசம்? "நிமினியோ" பாதிப்பு.. அபுதாபியில் பரவிய மெர்ஸ் கொரோனா! அலர்ட் தரும் WHO

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: கொரோனா பாதிப்பில் இருந்தே பெரும்பாடுபட்டு இப்போது தான் நாம் மீண்டுள்ள நிலையில், இப்போது புதிதாக மெர்ஸ் வகை கொரோனா அபுதாபியில் கண்டறியப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் படுத்தியபாட்டை இதுவரை நாம் யாரும் மறக்கவில்லை. கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா நம்மை ஒரு வழி செய்துவிட்டது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலக நாடுகளைப் புரட்டிப் போட்டது.

சுமார் 2 ஆண்டுகள் எங்கே போனது என்றே தெரியாத அளவுக்கு கொரோனா காலி செய்துவிட்டது. வேக்சின் தொடங்கிப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு கொரோனா இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது.

 WHO alerts as Abu Dhabi registers MERS-coronavirus case

மெர்ஸ் கொரோனா: நாமும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம். இதற்கிடையே நேற்றிரவு அபுதாபியில் ஆபத்தான மிடில் ஈஸ்ட் சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்குள்ள அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த மெர்ஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கோவிட் 19 பாதிப்பை விட மோசமானது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முதற்கட்டமாக அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரைச் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இருப்பினும், அவர்கள் யாருக்கும் மெர்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எப்படிப் பரவும்: பாதிக்கப்பட்ட நபர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக இந்த மெர்ஸ் கொரோனா ட்ரோமெடரி ஒட்டகங்கள் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவும். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் ட்ரோமெடரி ஒட்டகங்கள் அருகில் கூட சமீப காலங்களில் செல்லவில்லையாம். அப்படியிருக்கும் போது இவருக்கு எப்படி இந்த பாதிப்பு வந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

MERS-CoV என்று அழைக்கப்படும் மிடில் ஈஸ்ட் சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் சவுதி அரேபியாவில் கடந்த 2012ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு இது அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, கத்தார், சவூதி அரேபியா, பிரிட்டன், ஏமன் உட்பட 27 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மெர்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 936 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மொத்தம் 2,605 கேஸ்கள் பதிவான நிலையில், 936 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் 19 நோயாளிகளில் 5% கீழ் மட்டுமே உயிரிழப்பு இருந்த நிலையில், மெர்ஸ் கொரோனாவால் பாதிக்கப்படும் 35% பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகள்: மெர்ஸ் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் (zootonic virus) ஆகும். இவை பெரும்பாலும் சவூதி பாதிக்கப்பட்ட ட்ரோமெடரி ஒட்டகங்கள் மூலமாகவே மனிதர்களுக்கு வரும்..

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கும். இந்த பாதிப்பு மோசமானால் சில நேரங்களில் நிமோனியா பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+