மாட்டுப் பொங்கல் பசுவுக்கு மட்டும் தானா? எருமை மாடு என்ன செய்தது! அரியலூரில் திகவின் மாஸ் சம்பவம்!
அரியலூர்: தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் எருமை மாடு என்ன செய்தது? என்ற கேள்வியுடன் அரியலூரில் திராவிடர் கழகத்தினர் எருமை மாட்டுக்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்று முன் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் எருமை மாடுகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் எருமை மாட்டுப் பொங்கலை திராவிட கழகத்தினர் கொண்டாடினர். மாட்டுப்பொங்கல் அன்று பசு மற்றும் காளை மாடுகளுக்கு மட்டுமே மரியாதை செலுத்தப்படும் நிலையில் எருமை மாடுகளை ஒதுக்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. எருமை மாடுகளை ஒதுக்குவதும் சாதி பேதம் பார்ப்பது போல் தான் என்றும் மக்களுக்கு பயனளிக்கும் அனைத்து கால்நடைகளையும் ஒன்றாக கருதி கொண்டாட வேண்டும் என்ற திராவிடர் கழகத்தினர்.
தொடர்ந்து எருமை மாடுகளை ஒதுக்க கூடாது சமமாக கருத வேண்டும், மதிப்போம் மதிப்போம் எருமை மாட்டையும் மதிப்போம், சம உரிமை சம உரிமை எருமை மாட்டுக்கும் சம உரிமை என்ற முழக்கத்தோடு எருமை மாடுகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுதலை பெற்றுள்ளது.
முன்னதாக எருமை மாட்டை வைத்து மாட்டுப் பொங்கல் கொண்டாட வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருந்தார். ஆரிய போதனையால், காளை மாடு, பசு மாடு ஆகியவற்றை மட்டும் மாட்டுப் பொங்கலில் சிறப்புச் செய்து கொண்டாடுவது- எருமை மாடு என்ன குற்றம் செய்தது? வடநாட்டில் இன்றும்கூட பல மாநிலங்களில் எருமை தானே ஏர் பூட்டப்பட்டு உழவுப் பணிக்கு உதவுகின்றது! பின் ஏன் அதற்கு ஏதும் செய்யாது அரண்? கருப்பு! கருப்பு!! புராணக் கதைப் புளுகுப்படி அது எமன் ஏறும் வாகனமாம்!
வர்ண தருமம் அதில்கூட! கருப்பைக் கண்டால் அவ்வளவு எரிச்சல்! திரு.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். திராவிட நாகரிக ஆய்வுப் பெருமகனார். 'எருமை' எப்படி நமது பண்டைய இலக்கியங்களில் சிறப்புப் பெற்று, பின்னர் கருப்பு நிற வெறுப்பே முதன்மையாகி உழைக்கும் அதனை ஒதுக்கிவிட்ட கொடுமை அரங்கேற்றப்பட்டது பற்றி, விளக்கமாக எழுதியுள்ளார்! மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டுக்கும் சிறப்பு செய்வீர்!
பொங்கல் விழாவான திராவிடர் திருவிழாவில் மாட்டுப் பொங்கல் கொண்டாடும்போது, எங்கெங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ, அங்கெல்லாம் எருமைகளையும் குளிப்பாட்டி மாலையிட்டு, காளை, பசுமாட்டின் பக்கத்திலேயே நிறுத்திக் கொண்டாடி, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பணியினைச் சிறப்புடன் நடத்திட முயலுங்கள்! சிறுசிறு நிகழ்வுகளைக் கூட பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் ''அனைவருக்கும் அனைத்தும்'' உரியோர் என்பதற்கு இம்மாதிரி பண்பாட்டுப் புரட்சிகளை மேலும் சிறப்புடன் நடத்தி, வழிகாட்டிட முன்வரவேண்டும்" என கூறியிருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications